×

பொதுமக்கள் கோரிக்கை கடமலைக்குண்டு கிராமத்தில் இடதுசாரி கட்சிகள் வேன் பிரசாரம்

வருசநாடு, அக்.15: மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கடமலைக்குண்டு கிராமத்தில் இடதுசாரி கட்சிகள் சார்பில் வேன் பிரசாரம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் பெத்தாச்சி ஆசாத், மார்க்சிஸ்ட் கட்சி கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையில் பிரசாரம் நடைபெற்றது . மார்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன், சடையாண்டி, இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் குணசேகரன், மார்க்சிஸ்ட்  ஒன்றிய செயலாளர் மணவாளன், விவசாய சங்க செயலாளர் போஸ், பெருமாள் உள்ளிட்ட  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : parties ,village ,
× RELATED அறிவொளி கருப்பையா தகவல் கட்சியினர் வீதிவீதியாக வாக்குசேகரிப்பு