×

விழிப்புணர்வு முகாம்

காரைக்குடி, அக்.15:  காரைக்குடி அருகே லேனாவிலக்கு மவுண்ட்சீயோன் பொறியியல் மற்று தொழில்நுட்ப கல்லூரி, ரோட்டராக்ட் சங்கம், நர்சிங் கல்லூரி, சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் ரத்த தான விழிப்புணர்வு முகாம் நடந்தது. மவுண்ட் சீயோன் பொறியியல் கல்லூரி ரோட்டராக்ட் சங்க தலைவர் கெனின் கிளானன் தாஸ் வரவேற்றார். புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவர் கதிரேசன் தலைமை வகித்தார். ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் அந்தோணிசாமி முன்னிலை வகித்தார். மவுண்ட்சீயோன் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜெயபாரதன் செல்லையா, துணைத்தலைவர் பிளாரன்ஸ் ஜெயபாரதன், புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்க துணை ஆளுநர் டாக்டர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபாரதன், பொறியியல் கல்லூரி முதல்வர் பாலமுருகன், நர்சிங் கல்லூரி முதல்வர் ஜாஸ்மின்ஷீலா உள்பட பலர் கலந்து கொண்டனர். ரத்த தானம் குறித்து மாணவர்களிடம் விளக்கப்பட்டது. மாணவர்கள் சார்பில் 153 யூனிட் ரத்தம் தானமாக வழங்கப்பட்டது.

Tags : Awareness Camp ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு முகாம்