×

மேலூர் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்

மேலூர், அக். 15: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேலூர் நகர் மற்றும் மார்க்கெட் கிளைகளின் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அய்யன்பிள்ளை கூட்டத்திற்கு தலைமை வகிக்க, தாலுகா செயலர் கண்ணன் மற்றும் தாலுகா கமிட்டி உறுப்பினர்கள் மணவாளன், பாண்டிச்செல்வம் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:மேலூர் நகரில் உள்ள திருச்சி ரோடு, போஸ்ட் ஆபீஸ் ரோடு, கடலைக்கார தெரு, நாளங்காடி தெரு, தினசரி மார்க்கெட் பகுதி முழுவதும் கழிவுநீர் வாய்க்கால் சுத்தம் செய்யாமல் விட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் சுகாதாரமின்றி கொசு உற்பத்தியாகி பலவித நோய்கள் ஏற்படுகிறது. போர்கால அடிப்படையில் இவற்றை சீர் செய்ய வேண்டும்.நிரந்தர துப்புரவு தொழிலாளர் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பிரதி மாதம் முதல் தேதியில் சம்பளம் வழங்க வேண்டும். சாலக்கரையான் கண்மாய்கரையில் நடை பயிற்சி பாதையாக மாற்ற வேண்டும். தினசரி மார்க்கெட் கடைகளை புதிதாக கட்ட வேண்டும். டூவீலர் ஸ்டாண்ட் அமைத்து தர வேண்டும்.மேலூர் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும். தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலூர் உரகிடங்கு மற்றும் டிஎஸ்பி அலுவலகம் செல்லும் வழியில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : Melur Bus Station ,
× RELATED ஒரு ஓட்டு கூட போடாத இரண்டு கிராமமக்கள்