×

என்.சி.சி. மாணவர்கள் பேரணி

பேரையூர், அக். 15: பேரையூர் தாலுகா எழுமலையில் பேரையூர் தாசில்தார் ஆனந்தி தலைமையில் தேசிய பேரிடர் மேலாண்மை தணிக்கும் நாளை முன்னிட்டு என்.சி.சி.மாணவர்கள் பேரணி சென்றனர். இந்த பேரணி எழுமலை உசிலம்பட்டி சாலை, பழையபேருந்துநிலையம், எம்.கல்லுப்பட்டிசாலை, தேவர்சிலை, வழியாக சென்றது. அதில் மழைக்காலங்களில் கால்நடைகளை மின் கம்பங்களை கட்டிவைக்காதீர்கள், மழைக்காலங்களில் விழிப்புணர்வோடு இருங்கள், மின்சாதனப்பொருட்கள் இருக்கும் பகுதியை கவனமாக கையாளுங்கள் உள்ளிட்ட விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு மாணவர்கள் பேரணி சென்றனர்.

Tags : rally ,Encici Students ,
× RELATED அர்ஜெண்டினாவில்...