×

கொடைக்கானலில் கஞ்சா விற்ற பெண் உள்பட 4 பேர் கைது

கொடைக்கானல், அக். 15: கொடைக்கானலில் கஞ்சா விற்ற பெண் உள்பட 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 4 கிலோ 900 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வந்தன. இதன்பேரில் கொடைக்கானல் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொடைக்கானல் நகர் கல்லறை மேடு பகுதியில் கொடைக்கானலை சேர்ந்த ரமேஷ் (19), தேனியை சேர்ந்த ஆசைத்தம்பி மனைவி கஸ்தூரி (24) ஆகியோர் கஞ்சா விற்றது தெரிந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 2 கிலோ 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல் நாயுடுபுரம் பாக்கியபுரத்தில் கஞ்சா விற்றதாக பிரகாஷ் (40), இவரது மகன் கோகுல் ரமேஷ்வர் (25) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 2 கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 4 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kodaikanal ,
× RELATED கொடைக்கானலில் வறண்ட முகம் காட்டும்...