×

ஏற்காடு அருகே கொடிக்காடு கிராமத்தில் நடைபாதை ஆக்கிரமிப்பு புகார்

ஏற்காடு, அக்.15: ஏற்காடு அருகே கொடிக்காடு கிராமத்தில் நடைபாதையை மறிப்பதாக கிராம  மக்கள் அளித்த புகாரின்பேரில் வருவாய்த்துறையினர் விசாரித்தனர். ஏற்காடு டவுன் பஞ்சாயத்திற்குட்பட்ட கொடிக்காடு கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள், அப்பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டை ஒட்டிய நடைபாதையை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த 10 ஆண்டுக்கு முன்பு எஸ்டேட் நிர்வாகத்தினர் நடைபாதைய ஆக்கிரமித்து கேட் அமைத்தனர். இதையடுத்து, அதனையொட்டி இருந்த ஒரு அடி சந்தினை மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், அதனையும் எஸ்டேட் நிர்வாகத்தினர் மறித்ததாக கிராம மக்கள் தாசில்தாரிடம் புகார் தெரிவித்தனர். இதன்பேரில், நேற்று காலை ஏற்காடு வருவாய் ஆய்வாளர் பெரியசாமி தலைமையிலான அதிகாரிகள் கொடிக்காடு கிராமத்திற்கு சென்று நேரடி ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து தாசில்தாரிடம் அறிக்கை அளித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கிராம மக்களிடம் அதிகாரிகள் உறுதி கூறினர்.

Tags : Kodikadu village ,Yercaud ,
× RELATED நர்சரி கார்டனில் தீ விபத்து