×

சேலம் சூரமங்கலத்தில் ஆசிட் குடித்து காவலாளி தற்கொலை

சேலம், அக்.15: சேலம் சூரமங்கலம் அடுத்துள்ள அரியாகவுண்டம்பட்டி காளியம்மன்நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (68). இவர், சூரமங்கலத்தில் உள்ள தனியார் கடையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதியடைந்துள்ளார். இதனால், நேற்று முன்தினம் மாலை ஆறுமுகத்தை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உறவினர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். அதற்காக புறப்படும்படியும் கூறியுள்ளனர். இந்நிலையில் மாலை 6.30 மணிக்கு திடீரென ஆறுமுகம் மயங்கி விழுந்தார். அப்போது அவர், தான் ஆசிட்டை குடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். உடனே சேலம் அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தனர். ஆனால், அடுத்த ஒரு மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் உயிரிழந்தார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : drinking watchman ,suicide ,Salem ,
× RELATED கோடை விடுமுறையை குறிவைத்து ரயில்...