×

ஆரம்ப சுகாதார நிலையத்தில் தர்மபுரி எம்பி திடீர் ஆய்வு

நல்லம்பள்ளி, அக.15: தர்மபுரி எம்பி பாளையம்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், திடீர் ஆய்வு செய்த திமுக எம்பி, பராமரிப்பின்றி பூட்டி கிடந்த கழிப்பறையை சீரமைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கும்படி உத்தரவிட்டார்.
தர்மபுரி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். நேற்று பாளையம்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார். அங்குள்ள கழிவறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, கழிவறை சுத்தம் செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து செந்தில்குமார் எம்பி ஊழியர்களிடம் கேட்டபோது, அவர்கள் வெளிப்புறத்தில் இருக்கும் கழிவறையை பயன்படுத்துவதாக தெரிவித்தனர். இதையடுத்து, வெளிப்புறத்தில் உள்ள கழிவறையை பாத்த போது, அது பூட்டி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, உடனடியாக கழிவறையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.முன்னதாக, நோயாளிகளின் உறவினர் ஒருவர் கூறுகையில், ‘அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் சரிவர பணியில் இருப்பதில்லை. மேலும், குறித்த நேரத்தில் மருத்துவர்கள் பணிக்கு வருவதில்லை. எனவே, 24 மணி நேரமும் மருத்துவர்கள் குறித்த நேரத்தில் இருக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’
என்றார்.

Tags : Dharmapuri MB ,health center ,
× RELATED ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் விழிப்புணர்வு