×

இளம்பெண் மர்மச்சாவு

தர்மபுரி, அக்.15: தர்மபுரி மாரவாடி பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி ஆர்த்தி(26). திருமணமாகி 3 வருடமாகிறது. இவர் நேற்று முன்தினம், வாயில் நுரை தள்ளியபடி வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஆர்த்தி பூச்சி மருந்து குடித்து இறந்துள்ளதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த தர்மபுரி போலீசார், சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி 3 வருடமாவதால், தர்மபுரி ஆர்டிஓ, ஆர்த்தி எவ்வாறு இறந்தார்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் வாயில் பூச்சி மருந்து ஊற்றி கொலை செய்தனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED சூதாடிய 3 பேர் கைது