×

நீர்வரத்து குறைந்தது கெலவரப்பள்ளி அணையில் 568 கனஅடி தண்ணீர் திறப்பு

ஓசூர், அக்.15:  கெலவரப்பள்ளி அணைக்கான நீர்வரத்து மேலும் சரிந்துள்ள நிலையில், விநாடிக்கு 568 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆறு உற்பத்தியாகும் கர்நாடக மாநிலத்தின் நந்திமலை உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த கனமழையால், கெலவரப்பள்ளி அணைக்கு கடந்த ஒரு வாரமாக விநாடிக்கு 1368 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், மழை குறைந்ததால் நீர்வரத்து சரிந்துள்ளது. நேற்று முன்தினம், விநாடிக்கு 573 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி 568 கனஅடியாக உள்ளது. கெலவரப்பள்ளி அணையின் முழு கொள்ளளவு 44.28 அடியாகும். நேற்று முன்தினம் காலை அணையின் நீர்மட்டம் 41.66 அடியாக இருந்தது. இதனால், அணையில் இருந்து விநாடிக்கு 568 கனஅடி வீதம் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

Tags : Kelavarapalli Dam ,
× RELATED ஒசூர் கெலவரப்பள்ளி அணையில் நீர்...