×

ஓசூர் நகரில் டூவீலர் திருட்டு அதிகரிப்பு

ஓசூர், அக்.15:  பென்னாகரத்தை சேர்ந்தவர் ராஜதுரை. இவர் ஓசூர் அருகே பேகேப்பள்ளியில் தங்கி தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இவரது டூவீலரை, மர்மநபர்கள் நள்ளிரவில் திருடி சென்றனர். அதே போல் தர்கா பகுதியை சேர்ந்த பாபு என்பவரது டூவீலரும் கடந்த சில நாட்களுக்கு முன் திருடு போனது.  இந்த சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருக்கிறது. இன்னும் சில நாட்களில் தீபாவளி பண்டிகை வரவுள்ளதால், தொழில் நகரமான ஓசூரில் திருடர்கள் நடமாட்டம் அதிகரிக்கும். எனவே, குற்றங்களை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : theft ,Hosur ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...