பந்தலூர், அக். 15 :பந்தலூர் அருகே கரியசோலை கரியசோலை அரசு உயர்நிலைப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர் பள்ளி வளாகம் வழியாக செல்லும் உயர் மின்னழுத்த மின்கம்பம் தாழ்வாக செல்வதால் வளாகத்தில் ஓடி விளையாடும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. மேலும் மின்வாரியம் மூலம் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பம் முறையாக அமைக்காததால் கீழே சாயும் நிலையில் இருப்பதாக பெற்றோர்கள் கூறுகின்றனர். மின்கம்பம் சாய்ந்து ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் மின்கம்பத்தை சீரமைத்து தாழ்வான உயர் மின் கம்பியை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.