×

காந்தி பிறந்தநாளையொட்டி ஈரோட்டில் புகைப்படக் கண்காட்சி

ஈரோடு, அக்.15: காந்தியின் 150வது பிறந்தநாளையொட்டி ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் புகைப்பட கண்காட்சி நேற்று துவங்கியது.ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளையொட்டி காந்தியடிகளின் வரலாற்றை தெரிந்து கொள்ளும் வகையில் ஈரோடு செங்குந்தர் பள்ளி வளாகத்தில் புகைப்பட கண்காட்சி துவங்கியது. துவக்கவிழா நிகழ்ச்சிக்கு ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ்  தலைவர் ஈ.பி.ரவி தலைமை தாங்கினார்.இதில், சிறப்பு அழைப்பாளராக செங்குந்தர் பள்ளி தாளாளர் சிவானந்தம்  கண்காட்சியை  துவக்கி வைத்தார்.முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பெரியசாமி, மாவட்ட துணைத்தலைவர் ராஜேஷ் ராஜப்பா, மாவட்ட பொதுச் செயலாளர்கள் கண்ணப்பன், காமராஜ் பூபதி, கனகராஜ், தபால் நிலைய முதுநிலை மேலாளர் சாய்ராம்,  உதவி அலுவலர் சஞ்சய் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சியில், காந்தியின் அரிய புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது. இக் கண்காட்சி வரும் 16ம் தேதி வரை நடக்கிறது.

Tags : Gallery of Erode ,Birthday ,Gandhi ,
× RELATED வயநாட்டில் கம்பளகாடு பகுதியில் பிரியங்கா காந்தி ரோடு ஷோ..!!