×

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவை ரத்து : தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
சிங்கபெருமாள்கோவில் - காட்டாங்கொளத்தூர் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால், சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.20 மணிக்கு செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் வழியாக சென்னை கடற்கரைக்கு வந்தடையும் ரயில் நாளை மற்றும் 17ம் தேதி கூடுவாஞ்சேரி - அரக்கோணம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

* சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே  நாளை மற்றும் 17ம் தேதி காலை 9.32, 10.56, 10.55, 11.30, 12.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், தாம்பரம் - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
* சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே நாளை மற்றும் 17ம் தேதி காலை 10.08, 11.48, 10.30,1 11.30, மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரி - செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படுகிறது. கும்மிடிப்பூண்டி வழித்தடம்: தண்டையார்பேட்டை - எண்ணூர் மார்க்கத்தில் பராமரிப்பு பணி இன்று தொடங்கி 18ம் தேதி வரை நடக்கிறது. தினசரி இரவு 12.20 மணிக்கு தொடங்கும் பணி அதிகாலை 4.20 மணிக்கு முடியும். இதையொட்டி இரவு 12.15 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு செல்லும் ரயில் இன்று தொடங்கி 18ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இதேபோல், மறு மார்க்கத்தில் கும்மிடிப்பூண்டியில் இருந்து அதிகாலை 2.45 மணிக்கு மூர்மார்க்கெட்டுக்கு புறப்படும் ரயிலும் சம்மந்தப்பட்ட தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. தாமதமாக இயக்கப்படும்: நாயுடுபேட்டா மார்க்கத்தில் வரும் 19ம் தேதி தண்டவாள பராமரிப்புப்பணி காலை 8.15 மணி முதல் மாலை 5.15 வரை நடக்கிறது. இதையொட்டி விஜயவாடாவிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு புறப்படும் ரயில் ஒரு மணிநேரம் தாமதமாக 7 மணிக்கு புறப்படும். தானாபூரிலிருந்து இரவு 8.10க்கு பதில் 75 நிமிடம் தாமதமாக பெங்களூருவுக்கு புறப்படும்.
* சந்திரகாசியிலிருந்து மதியம் 12.40க்கு பதில் 1.35 மணிக்கு சென்ட்ரலுக்கு ரயில் புறப்படும். அகமதாபாத்திலிருந்து 7.30க்கு புறப்படும் 8.45 மணிக்கு தாமதமாக சென்னைக்கு ரயில் புறப்படும். ஹவுராவிலிருந்து மதியம் 2.50 மணிக்கு பதிலாக மாலை 6.05 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு ரயில் புறப்படும்.
* சென்ட்ரலில் இருந்து காலை 5.30 மணிக்கு சூளூர்பேட்டைக்கு புறப்படும் ரயில், சூளூர்பேட்டையிலிருந்து நெல்லூருக்கு காலை 8 மணிக்கு புறப்படும் ரயில், நெல்லூரிலிருந்து காலை 10 மணிக்கு சூளூர்பேட்டைக்கு புறப்படும் ரயில், சூளூர்பேட்டையிலிருந்து சென்ட்ரலுக்கு மதியம் 12 மணிக்கு புறப்படும் ரயில்கள் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளது.

Tags : cancellation ,Southern Railway ,
× RELATED கோடை விடுமுறையை முன்னிட்டு 19 சிறப்பு...