×

அரசு பஸ் குலுங்கியதில் கண்ணாடி உடைந்தது

கடையம், அக். 15:  பாபநாசத்தில்  இருந்து நேற்று மாலை தடம் எண் 761 அரசு பஸ் மதுரை நோக்கி புறப்பட்டது.  இந்த பஸ் அம்பை, ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, பொட்டல்புதூர் மற்றும்  கடையத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு தென்காசி சென்றது. 4.30  மணியளவில் மாதாபுரம் அருகே செல்லும்போது திடீரென ஏர்வாங்கி பஸ்  குலுங்கி நின்றது. அப்போது அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கி  விழுந்தது. இதில் பஸ்சில் இருந்த 2 பெண்கள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர். தொடர்ந்து பஸ்சை இயக்கிய டிரைவர் தென்காசி புதிய பஸ்  நிலையத்திற்கு கொண்டு சென்றார். அங்கிருந்து மாற்று பஸ்சில், பயணிகள் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags :
× RELATED ஆலங்குளம் அருகே கடன் தொல்லையால் பெண் தற்கொலை