×

சேரன்மகாதேவி புதிய சப்-கலெக்டர் பதவியேற்பு

வீரவநல்லூர், அக். 15:  சேரன்மகாதேவி புதிய சப்-கலெக்டராக பிரதிக் தயாள் பதவியேற்றார்.சேரன்மகாதேவியில் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் 1914ம் ஆண்டு சப்-கலெக்டர் அலுவலகம் திறக்கப்பட்டது. முதல் சப்-கலெக்டராக ப்ரிக்ஸ்டோக் பதவியேற்றார். கடைசியாக பணியில் இருந்த ஆகாஷ், கடந்த மாதம் சென்னை மாநகராட்சி இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து புதிய சப்-கலெக்டராக புதுடெல்லியை சேர்ந்த பிரதிக் தயாள் நியமிக்கப்பட்டார். இவர், நேற்று காலை சேரன்மகாதேவியின் 120வது சப்-கலெக்டராக பதவியேற்றார். அலுவலகத்தில் நடந்த விழாவில் சப்-கலெக்டர் (பொறுப்பு) பால்பாண்டி, புதிய சப்-கலெக்டர் பிரதிக் தயாளிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார். தொடர்ந்து பள்ளி மாணவிகளின் பேரிடர் விழிப்புணர்வு பேரணியை சப்-கலெக்டர் பிரதிக் தயாள் துவக்கி வைத்தார். இதில் தாசில்தார் சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Cheranmagadevi ,Sub-Collector ,
× RELATED சேரன்மகாதேவியில் குண்டாசில் வாலிபர் கைது