×

அறந்தாங்கி அருகே சரக்கு வேனில் மணல் கடத்தியவர் கைது

அறந்தாங்கி, அக்.15: அறந்தாங்கி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ரேஷ்மா, செங்கமாரி பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது செங்கமாரி பிள்ளையார்கோவில் அருகே ஒரு மகிந்திரா பிக்அப் சரக்கு வேனில் வெள்ளாற்றில் இருந்து மணல் ஏற்றி வருவதை பார்த்தார். உடனே அந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, வாகனத்தில் முறையான அனுமதி பெறாமல் மணல் கடத்திவந்தது தெரியவந்தது. உடனே எஸ்.ஐ ரேஷ்மா, வாகனத்தில் இருந்த அரை யூனிட் மணல், வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தார். மேலும் வாகன உரிமையாளர் செங்கமாரி தனசேகரபாண்டியன், ஓட்டுனர் கடையாத்துப்பட்டியை சேர்ந்த விஜய் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, ஓட்டுனர் விஜயை கைது செய்து விசாரித்து வருகிறார்.

Tags : cargo van ,Aranthangi ,
× RELATED கடத்தப்பட்ட அரசு பஸ் விபத்தில் சிக்கியது