×

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 5 நாள் சிறப்பு பயிற்சி வகுப்பு

உளுந்தூர்பேட்டை,  அக். 15: எலவனாசூர்கோட்டையில் உளுந்தூர்பேட்டை  மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் மத்திய அரசின் மனிதவள மேம்பாடு துறை இணைந்து  ஆசிரியர்களுக்கான கற்றலில் குறைபாடு உள்ள மாணவர்களை மேம்படுத்துதல்,  தலைமை பண்புகளை மேம்படுத்துதல் குறித்த 5 நாள் பயிற்சி வகுப்பு அரசு ஆண்கள்  மேல்நிலைப்பள்ளியில் துவங்கியது.  மாவட்ட கல்வி அலுவலர் ரவி தலைமை  தாங்கி பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்தார். உளுந்தூர்பேட்டை, திருநாவலூர்,  தியாகதுருகம் பகுதியை சேர்ந்த வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய  மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். இதில் உளுந்தூர்பேட்டை  மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட அரசு பள்ளிகளை சேர்ந்த 150  ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.

Tags : government school teachers ,
× RELATED ₹10 லட்சம் ஊக்கத்தொகையுடன் அண்ணா...