×

வேளாண் அமைச்சர் அறிவுறுத்தல் காரைக்கால் அரசலாறு திருமலைராஜன்ஆற்றில் மணல் கடத்திய 4 டிராக்டர் பறிமுதல்

காரைக்கால், அக்.15: காரைக்கால் அரசலாறு மற்றும் திருமலைராஜனாற்றில் மணல் கடத்திய 4 டிராக்டர்களை மாவட்ட வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். காரைக்காலில் உள்ள ஆறுகளில் மணல் அள்ள மாவட்ட வருவாய்த்துறை தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறி காரைக்காலில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர், தொழில் அதிபர்கள் மாவட்ட வருவாய் துறையின் அனுமதியின்றி மணல் அள்ளி வருகின்றனர். இதனை மாவட்ட வருவாய்த் துறையினர் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். தொழில் போட்டி காரணமாக யாரேனும் புகார் அளித்தால் மட்டுமே வருவாய் துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் காரைக்கால் அரசலாறு, திருமலைராஜனாறு உள்ளிட்ட ஆறுகளிலிலிருந்து டிராக்டர்களில் மணல் அள்ளுவதாக வந்த புகாரின் பேரில், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பகுதிக்கு போலீசாருடன் சென்றனர். அதிகாரிகளை பார்த்தவுடன், 4 டிராக்டர்களில் மணல் அள்ளிய கும்பல் டிராக்டரை அப்படியே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். தொடர்ந்து, 4 டிராக்டர்களையும் பறிமுதல் செய்த வருவாய்துறை அதிகாரிகள், டிராக்டர்கள் யாருக்கு சொந்தமானது, அதில் மணல் அள்ளியது யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Karaikal ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...