×

சர்வீஸ் சாலை அமைக்கும் பணிக்கு நிலம் ஆர்ஜிதம் செய்ய நடவடிக்கை

பண்ருட்டி, அக். 15:  பண்ருட்டி- சென்னை சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம் சர்வீஸ் சாலை அமைக்காததால் போராட்டம் நடத்தப்படும் என அனைத்து கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து போராட்டம் குறித்த மனுவினை நேற்று தாசில்தார் உதயகுமாரிடம் அனைத்து கட்சி நிர்வாகிகள் சார்பில் வழங்கப்பட்டது. போராட்டம் முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். அனைத்து கனரக வாகனங்கள் சென்று வர வேண்டும், காய்கறி வியாபாரிகள், பள்ளி மாணவர்கள் செல்ல முடியாமல் வருவதை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். தாசில்தார் உதயகுமார் நெடுஞ்சாலைத்துறை மூலம் சர்வீஸ் சாலையை முறையாக அமைப்பதற்கு கணக்கெடுப்பு செய்து நில ஆர்ஜிதம் செய்து சாலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

Tags : land ,
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!