×

மாற்றுத்திறனாளிக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்க வேண்டும் பாதிப்படைந்த மகளுடன் தாய் கலெக்டரிடம் மனு

நாகை,அக்.15: மாற்றுத்திறனாளிக்கான பராமரிப்பு உதவித்தொகை கோரி நாகை கலெக்டர் அலுவலகத்தில் மகளுடன் தாய் மனு கொடுத்தார்.
குத்தாலம் அருகே திருவாடுதுறை அவுரிமேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ஷாஜகான். சமையலர். இவரது மனைவி பர்வீன். இவர் தனது மாற்றுதிறன் படைத்த மகள் சபானாபிர்தௌஸ்(17) என்பவருடன் நாகை கலெக்டர் அலுவலகம் வந்தார். அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
சபானாபிர்தௌஸ் தனது வயதிற்கு உரிய வளர்ச்சி அடையவில்லை. மேலும் அவருக்கு அடிக்கடி உடல்நல குறைவு ஏற்படும். இதனால் ஆஸ்பத்திரிக்கு சென்று மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளது. எனவே மாற்றுத்திறனாளியான எனது மகளின் பராமரிப்பு செலவிற்கு உதவித்தொகை வழங்க கோரி கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மனு கொடுத்து வருகிறேன். ஆனால் இதுநாள் வரை உதவித்தொகை கிடைக்கவில்லை. எனவே மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை கிடைக்க உதவி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags : mother collector ,
× RELATED பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை - மாணவனின் தாய் கலெக்டரிடம் புகார்