கடலூர், அக். 15: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடியேற்று விழா கடலூர் பகுதியின் கோண்டூர், தானம் நகர், நவநீதம் நகர் ஆகிய பகுதிகளில் நடந்தது. கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி கொடி ஏற்றி சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், நிர்வாகிகள் செய்தி தொடர்பாளர் பால புதியவன், நகர செயலாளர்கள் ராஜதுரை, செந்தில், சேது, கிட்டு, மாநில நிர்வாகிகள் தர், சக்திவேல், ரகு, பிரதீப், முரளி, ஜான்சன், சரண் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.