தென்தாமரைகுளம்,அக். 15: நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் நேற்று காலை, சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதிக்கு வந்தார். அவரை குரு பாலஜனாதிபதி சால்வை அணிவித்து வரவேற்றார். தொடர்ந்து அவர் அய்யாவை தரிசித்தார். அதன் பிறகு ரூபி மனோகரன் நிருபர்களிடம் கூறியது.
நாங்குநேரி தொகுதியில் காங்கிரசின் வெற்றி உறுதியாகி விட்டது. வாக்கு வித்தியாசத்தை அதிகரிக்க கடுமையாக உழைக்கிறோம். தொகுதி மக்களுக்காக கடுமையாக உழைப்பேன். சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டால் அய்யாவின் அவதார தினத்துக்கு தமிழகம் முழுவதும் விடுமுறை பெற்று தர குரல் கொடுப்பேன் என்றார்.