×

நாகர்கோவிலில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

நாகர்கோவில், அக்.15: நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர் அருள்சிவா உள்ளிட்டோர் மீது காவல்துறை பொய் வழக்கு பதிவு செய்து இருப்பதாகவும் ,அதை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், நேற்று காலை நீதிமன்றம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ராஜேஷ் தலைைம வகித்தார். உதவி தலைவர் கோபால கிருஷ்ணன், பொருளாளர் நாகராஜன் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பா–்ட்டத்தில் வழக்கறிஞர்கள் சங்க கூட்டுக்குழு துணைத்தலைவர் அசோகன், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் மரிய ஸ்டீபன், நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் ஜெயக்குமார் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள், வக்கீல் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாகர்கோவிலில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பும் செய்தனர்.

Tags : Court ,Nagercoil ,
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...