×

தூத்துக்குடி அருகே கார் மோதியதால் கடைக்குள் பாய்ந்த ஆட்டோ

ஸ்பிக்நகர், அக். 15: முள்ளக்காடு அருகே  கார் மோதியதால் லோடு ஆட்டோ  பூட்டிய கடைக்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் லோடுஆட்டோ டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். தூத்துக்குடி அடுத்த எம் சவேரியார்புரம் கணேஷ்நகர் பகுதியை சேர்ந்த வேல் நாடார் மகன் பொன்ராஜ் (36). லோடு ஆட்டோ டிரைவரான இவர் குலையன்கரிசல் பகுதியில் இருந்து இலைக்கட்டுகளை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடிக்கு சென்றுகொண்டிருந்தார். முள்ளக்காடு அருகே வந்தபோது திருச்செந்தூரில் இருந்து மதுரைக்கு சென்றுகொண்டிருந்த கார், இவரது லோடு ஆட்டோ மீது மோதியது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய லோடு ஆட்டோ அருகே பூட்டியநிலையில் இருந்த கடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் பொன்ராஜ் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இருப்பினும் விபத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

Tags : collision ,Thoothukudi ,
× RELATED மோடிக்கும், ராகுலுக்கும் இடையே நடக்கும் போட்டி: அஜித் பவார் பேச்சு