×

திருச்செந்தூர் அருகே பைக் விபத்தில் வாலிபர் சாவு

திருச்செந்தூர்,  அக். 15: திருச்செந்தூர் அருகே கல்வேலி மீது பைக் மோதியதில் படுகாயமடைந்த  தனியார் ஊழியர் சிகிச்சை பலனின்றி இறந்தார். ஆறுமுகநேரி, பேயன்விளையைச் சேர்ந்த கோபால் மகன்  அரசகுமார் (32). கல்லாம்மொழியில் தனியார் மின் உற்பத்தி ஆலையில்  மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். இவரும், இவரது நண்பரும் ஆறுமுகநேரி  தனியார் வங்கி ஊழியரான சுடலைராஜா (22) என்பவரும் மெஞ்ஞானபுரத்தில் உள்ள மற்றொரு நண்பரான விஸ்வநாதன் என்பவரை பார்க்க நேற்று முன்தினம் இரவு பைக்கில் சென்றனர். பைக்கை அரசகுமார் ஓட்டினார்.

  பாளை ரோட்டில் காந்திபுரம் விலக்கு அருகே சென்றபோது அப்பகுதியில் பூங்காவை சுற்றி அமைக்கப்பட்டிருந்த கல்வேலியில் பைக் மோதியது. இதில்  படுகாயமடைந்த அரசகுமாரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அரசகுமார் உயிரிழந்தார். அவருக்கு  ஆதிபரமேஸ்வரி (28) என்ற மனைவியும், பிறந்து 20 நாட்களே ஆன குழந்தையும்  உள்ளனர். விபத்து குறித்து திருச்செந்தூர் இன்ஸ்பெக்டர் முத்துராமன் விசாரணை  நடத்தி வருகிறார்.


Tags : bike accident ,Thiruchendur ,
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...