×

இன்ஸ்பெக்டர் மரணம்

தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை சிங்கார தோட்டம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் ஸ்ரீதேவி (49). இவர் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவருடைய கணவர்   முருகன் (55). இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. ஸ்ரீதேவி கடந்த 4 மாதங்களுக்கு முன் உடல்நிலை சரியில்லை என்று விடுப்பு எடுத்துக்கொண்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அப்போது  அவருக்கு புற்றுநோய்  இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.  இதைத்தொடர்ந்து  சிகிச்சை பெற்று வந்தவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், சிகிச்சை அளித்தாலும் பயனில்லை என்றும் மருத்துவர்கள்  கூறியதால், உறவினர்கள் அவரை வீட்டுக்கு அழைத்து வந்தனர். வீட்டில்  நேற்று மதியம் உயிரிழந்தார். உடன் பணிபுரிந்த காவலர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Tags : Death ,Inspector ,
× RELATED காவலர்கள், அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு: அதிகாரிகள் ஆய்வு