×

மாநகர பஸ் மீது லாரி மோதி விபத்து: பயணிகள் உயிர் தப்பினர்

திருவொற்றியூர்: எர்ணாவூர் மேம்பாலம் அருகே மாநகர பேருந்து  மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். சென்னை வள்ளலார்  நகரிலிருந்து எண்ணூர் வரை  செல்லும் (தடம் எண் 56) மாநகர பேருந்து, நேற்று மாலை சுமார் 40 பயணிகளுடன் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.  எர்ணாவூர் மேம்பாலம் அருகே வளைவில் மாநகர பேருந்து திரும்பியபோது, மணலியில் இருந்து  எண்ணூர் நோக்கி  வேகமாக வந்த கன்டெய்னர்  லாரி, மாநகர பேருந்தின் பக்கவாட்டில்  மோதியது. இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது.  இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர்.  அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து மாதவரம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Passengers ,
× RELATED செங்கல்பட்டு புறவழிச்சாலையில் லாரி...