×

வாகன ஓட்டிகள் அவதி ராஜபாளையம் அருகே சாலையில் ஓடும் கழிவுநீர்

ராஜபாளையம், அக். 10: ராஜபாளையம் அருகே, முத்துசாமியாபுரம் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில் கழிவுநீர் செல்வதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.  ராஜபாளையம் அருகே, முகவூர் பஞ்சாயத்தில் உள்ள முத்துசாமியாபுரம் கிராமத்தில், தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக சுற்றுலாத்தலமான குற்றாலம் மற்றும் செங்கோட்டை, கொல்லம் ஆகிய நகரங்களுக்கு, ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்நிலையில், இப்பகுதியில் உள்ள குடியிருப்பில் வாறுகால் வசதியில்லாததால், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் தேசிய நெடுஞ்சாலையில் செல்கிறது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் கழிவுநீர் வழியாக சென்று வருகின்றன. தேசிய நெடுஞ்சாலையில் ஓடும் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காண, பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே, முகவூர் பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : road ,Avadi Rajapalayam ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...