×

ராஜபாளையத்தில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்

ராஜபாளையம், அக். 10: ராஜபாளையத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக, நகராட்சி சார்பில் பழைய பேருந்து நிலையம், ஜவகர் மைதானம், மலையடிப்பட்டி எம்.ஆர்.நகர், கீழ ஆவரம்பட்டி, பஞ்சு மார்க்கெட் ஆகிய பகுதிகள் உள்ளிட்ட 15 இடங்களில், ஆணையர் ஜோதிக்குமார் உத்தரவின் பேரில், நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நடந்தது. நகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கினார். இது குறித்து ஆணையாளர் கூறுகையில், ‘பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் பல இடங்களில் நடைபெற்றது. தொடர்ந்து 5 நாட்களுக்கு வழங்கப்படும். பொதுமக்கள் நில வேம்பு குடிநீரைப் பருகி, காய்ச்சல் முதலான நோய்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.  இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் காளி, மாரிமுத்து, பழனிச்சாமி, பாலகிருஷ்ணன், சுதாகர், சுதாகரன் ஆகியோர் செய்திருந்தனர்.   

Tags : drinking water camp ,Rajapalayam ,
× RELATED ராஜபாளையத்தில் திமுக வேட்பாளர் தீவிர...