×

டெங்கு தடுப்பு பணி கடமலையில் தீவிரம்

வருசநாடு, அக்.10: கடமலைக்குண்டு கிராமத்தில் டெங்கு நோய் தடுப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடமலைக்குண்டு ஊராட்சி,கடமலைக்குண்டு சுகாதாரத்துறையும் இணைந்து டெங்கு நோய் தடுப்பு பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. இதில் தேனி மாவட்ட உதவி திட்ட மண்டல அலுவலர் அண்ணாதுரை, மயிலாடும்பாறை ஒன்றிய ஆணையாளர்கள் திருப்பதி வாசகன், கருப்புசாமி, ஊராட்சி செயலர் துரைப்பாண்டி, வட்டார மருத்துவ அலுவலர் கலாவதி, மருத்துவ அலுவலர் ஜெகதீஸ்வரி, சுகாதார ஆய்வாளர்கள் சிவராமன், நாராயணசாமி, முருகானந்தம், கஜேந்திரன், சுகாதார ஆய்வாளர் மேற்பார்வையாளர் கஜேந்திரன், மயிலாடும்பாறை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உதய மணிமாலா பங்கேற்றனர். பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

Tags :
× RELATED கடமலைக்குண்டு அருகே காட்டு யானைகளால்...