×

வருசநாடு அருகே புதிய தமிழகம் ஆர்ப்பாட்டம்

வருசநாடு, அக்.10: தேவேந்திரகுல வேளாளர் அரசாணை மற்றும் பட்டியல் வெளியேற்றத்தை தாமதப்படுத்தும் தமிழக அரசைக் கண்டித்து வருசநாடு அருகே புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வருசநாடு அருகே அம்பேத்கர் காலனியில் தேனி மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடமலை - மயிலை ஒன்றிய செயலாளர் பழனிக்குமார் முன்னிலை வகித்தார். முன்னதாக தியாகி இமானுவேல் சேகரனாரின் 95வது பிறந்த நாளையொட்டி அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : demonstration ,Tamil ,Varushanadu ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்