×

காரைக்குடி நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் ‘ஸ்டிரைக்’

காரைக்குடி, அக்.10: காரைக்குடி நகராட்சி தனியார் துப்புரவு பணியாளர்கள் நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.காரைக்குடி நகராட்சியில் 131 தனியார் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கடந்த அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று மதியத்திற்கு மேல் பணிக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இதற்கு விளக்கம் கேட்டு, தனியார் ஒப்பந்த தொழிலாளர்களின் ஏஐடியுசி சங்க நகர செயலாளர் ராம்ராஜூக்கு காரைக்குடி நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுமுறை நாளன்று பணிக்கு வரக் கூறி கட்டாயப்படுத்துவதாகவும், நோட்டீஸை திரும்ப பெறக்கோரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் 131 பேர் மற்றும் நகராட்சி துப்புரவு தொழிலாளர் 100க்கும் மேற்பட்டோர் என சுமார் 250 பேர் காரைக்குடி நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு நிலவியது.

Tags : Karaikudi Municipal Sanitation Workers 'Strike ,
× RELATED கோடை வெயிலால் விற்பனை ஜோர் மடப்புரம்...