×

வழிதெரியாமல் அவதி கடற்கரைகளில் கலங்கரை விளக்கம் மீனவர்கள் வலியுறுத்தல்

சாயல்குடி, அக். 10:  சாயல்குடி பகுதியிலுள்ள பத்திற்கும் மேற்பட்ட கடற்கரைகளில் கலங்கரை விளக்கம் புதிதாக அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மன்னார் வளைகுடா கடல்பகுதியான கன்னிராஜாபுரம் ரோச்மா நகர், நரிப்பையூர், மூக்கையூர், மாரியூர், ஒப்பிலான், கீழமுந்தல், மேலமுந்தல், வாலிநோக்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி கடற்கரை மிகவும் ஆழமான பகுதி என்பதால் மீன்பிடித் தொழில் பிரதான தொழிலாக நடந்து வருகிறது. இக்கடற்கரை கிராமங்களில் அதிகாலை கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு கடற்கரைகளில் தெருவிளக்கு, சாலை வசதி, மீன் பதனிடும் அறை, மீன் வலை பாதுகாப்பு அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி சிரமப்படுவதாக கூறுகின்றனர். மேலும் அருகருகே மீனவ கிராமங்கள் உள்ளதால் கடலுக்குள் மீன்பிடிக்க சென்று விட்டு, கடற்கரைக்கு திரும்பும்போது அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வழிதெரியாமல் அவதிப்படுவதாக கூறுகின்றனர். இந்நிலையில் மூக்கையூரில் மீன்பிடி துறைமுகம் ரூ.113.90 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் திறக்கப்பட்டது. எனவே துறைமுகம் உள்ள மூக்கையூர், ரோச்மா நகர், மாரியூர், வாலிநோக்கம், கீழமுந்தல் ஆகிய கடற்கரைகளில் கலங்கரை விளக்கம் அமைத்து தரவேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Lighthouse fishermen ,Avadi ,beaches ,
× RELATED பரோட்டா சாப்பிட்ட தொழிலாளி மூச்சு திணறி பரிதாப சாவு: ஆவடி அருகே சோகம்