×

டாஸ்மாக் கடையை உடைத்து திருட்டு

சோழவந்தான் அருகே அய்யப்பா ரங்கன்பட்டியில் டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. இங்கு மேற்பார்வையாளராக ராஜா, விற்பனையாளராக கண்ணன் பணியாற்றி வருகின்றனர். இருவரும் நேற்று முன்தினம் இரவு விற்பனையை முடித்து கடையை அடைத்து விட்டு சென்றனர். நேற்று மதியம் கடையை திறந்த போது பின்புற சுவற்றில் துளையிடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து கல்லாவை பார்த்த போது அதிலிருந்த பணம் மற்றும் கடையிலிருந்த மதுபாட்டில்கள் திருடு போயிருந்தது தெரிந்தது. இதுகுறித்த புகாரில் காடுபட்டி எஸ்ஐ வாண்டையார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

Tags :
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளை தீவிரமாக...