×

கிணற்றில் விழுந்த தொழிலாளி பலி

தர்மபுரி, அக்.10: தர்மபுரி நாகரசனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன்(40), தொழிலாளி. இவருடைய மனைவி முருகம்மாள். இவர்களுக்கு 2மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 17ம் தேதி கிருஷ்ணாபுரம் திப்பம்பட்டி அருகே உள்ள விவசாய கிணற்றில் மாரியப்பன் தூர்வாரும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென கிணற்றினுள் மாரியப்பன் தவறி விழுந்தார். இதில் படுகாயமடைந்த மாரியப்பனை மீட்ட அங்கிருந்தவர்கள், தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாரியப்பன் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், கிருஷ்ணாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED விழிப்புணர்வு பிரசாரம்