×

சேலம், கிருஷ்ணகிரியில் இன்று நடக்கிறது வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்

சேலம், அக்.10: சேலம், கிருஷ்ணகிரியில் நாளை தொழிலாளர் வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம் நடக்கிறது. சேலம் சொர்ணபுரி எஸ்.ஜெ. பிளாசாவில் செயல்பட்டு வரும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தில் மண்டல ஆணையர் ஹிமான்ஷூ குமார் தலைமையிலும், கிருஷ்ணகிரி கூட்டுறவு காலனி மேற்கு இணைப்பு சாலையில் உள்ள கிருஷ்ணகிரி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் அமலாக்க அதிகாரி இளங்கோவன் தலைமையிலும், ஈரோடு கருங்குளம், காவிரி சாலையில் உள்ள ஈரோடு வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் மண்டல ஆணையாளர் சிசுபாலன் தலைமையிலும் இன்று ‘நிதி ஆப்கே நிகட்’ குறைதீர் கூட்டம் நடக்கிறது.

இக்கூட்டத்தில், காலை 10.30 முதல் மதியம் 1 மணி வரை சந்தாதாரர்களுக்கான குறைதீர் கூட்டமும்,  மதியம் 3 மணி முதல் 4 மணி வரையில் தொழிலதிபர்களுக்கும், மாலை 4 மணி முதல் 5 மணி வரையில் விலக்களிக்கப்பட்ட நிறுவனங்களுக்கான குறைதீர் கூட்டமும் நடத்தப்படுகிறது.
இதில், வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைகளை தெரிவிக்க விரும்பும் உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தொழில் சங்க பிரதிநிதிகள் முறைப்படி பதிவு செய்து தெரிவிக்கலாம். இத்தகவலை தொழிலாளர் வருங்கால வைப்புநிதி மண்டல உதவி ஆணையர் நவீன் இம்மானுவேல் தெரிவித்துள்ளார்.  

Tags : Future Deposit Fund Meeting ,Krishnagiri ,Salem ,
× RELATED வீரப்பன் மகளுடன் பாமகவினர் வாக்குவாதம்