×

செல்போனை கேட்டதால் ஆத்திரம்; நண்பரை

தாக்கியவர் கைதுகிருஷ்ணகிரி, அக்.10: கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அருகே சிந்தகம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (24). கூலித்தொழிலாளியான இவரிடம், அவரது நண்பரான அதேப் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (26) என்பவர் கடந்த 6ம் தேதி, செல்போனை வாங்கி சென்றுள்ளார். இந்நிலையில் பாலாஜி, செல்வகுமார் வாங்கி சென்ற தனது செல்போனை திருப்பி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த செல்வகுமார் மற்றும் அவரது நண்பர் சிவசங்கர் (26) ஆகியோர் பாலாஜியை தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த பாலாஜியை அங்கிருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த கந்திகுப்பம் போலீசார், செல்வகுமார் மற்றும் சிவசங்கர் மீது வழக்குப்பதிவு செய்து, சிவகங்கரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள செல்வகுமாரை தேடி வருகின்றனர்.

Tags : Friends ,
× RELATED துபாயில் 2 ஆண்டுகளில் பெய்ய வேண்டிய...