×

கடத்தூர் சாலையோரம் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தல்

கடத்தூர், அக்.10: கடத்தூர்- தர்மபுரி சாலையோரத்தில் செயல்படும் டாஸ்மாக் கடையைவேறு இடத்திற்கு மாற்ற ேவண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடத்தூர்-தர்மபுரி சாலையோரத்தில், அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.  இந்த கடையில் பார் வசதி இல்லாததால், சாலையோரத்தில் அமர்ந்து மது அருந்துகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும், பள்ளி, கல்லூரி மாணவிகள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும், குடிமகன்கள் போதையில் சாலையில் நின்று கொண்டு, தகராறு செய்வதால்,  போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் இந்த டாஸ்மாக் கடையை ேவறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : removal ,Kadathur ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...