×

வையம்பட்டி அருகே மழைநீரால் தெப்பகுளமாக மாறிய ரயில்வே சுரங்கப்பாதை வாகன ஓட்டிகள் திணறல்

மணப்பாறை, அக்.10: வையம்பட்டி அருகே மேற்கூரை அமைந்துள்ள ரயில்வே சப்வேயில் மழைநீர் தேங்குவதால் வாகனஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதையை கடந்து செல்ல முடியாமல் திணறி வருகின்றனர். மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள கீரனூர் ரயில்வே சுரங்க பாதைகளில் மேற்கூரை அமைத்த பின்னரும் தேங்கி நிற்கும் மழைநீரால் மக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். சுக்காவழி, மீனாட்சியூர், புதுவாடி, குமரன்பட்டி, கட்டக்காம்பட்டி கிராம மக்கள் கீரனூரில் அமைந்துள்ள ரயில்வே சுரங்கப்பாதை வழியாக மெயின் ரோட்டுக்கு வந்து செல்ல வேண்டும். இங்கு புதிய ரயில்பாதை அமைத்தபோது மேற்கூரையுடன் சப்வே அமைக்கப்பட்டது.

இந்நிலையில் அவ்வப்போது பெய்து வரும் மழையினால் பக்கவாட்டு சுவர்கள் வழியே மழைநீர் கசிந்து சுரங்கப் பாதைகளில் பெருமளவு நீர் தேங்கி நிற்கிறது. இங்கு மேற்கூரை அமைக்கப்பட்டதால் நீரை வெளியேற்றும் மின்மோட்டார் அமைப்பு நிறுவப்படவில்லை. இதனால் இவ்வழியே வாகனங்கள் செல்லும்போது நீரினால் இன்ஜின் இயக்கம் நின்று விடுவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அத்துடன் புது வாடியில் உள்ள பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் இந்த சுரங்கப்பாதையை கடக்க கடும் அச்சத்துடனேயே செல்லும் நிலைமை உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Railway tunnel motorists ,Vaiyampatti ,
× RELATED மர்மநபர்களுக்கு வலை சாலைபணியை...