×

விஜயதசமி நாளில் அங்கன்வாடி மையங்களில் 711 குழந்தைகள் சேர்ப்பு

திருப்பூர், அக். 10: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் விஜயதசமியையொட்டி 711 குழந்தைகள் சேர்க்கப்பட்டனர். விஜயதசமியை ஒட்டி அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் சேர்க்கை நடத்தலாம் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் மாணவர் சேர்க்கைக்காக அங்கன்வாடி மையங்கள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டிருந்தன. இதில் குழந்தைகள் தங்களது பெற்றோருடன் வந்து அங்கன்வாடியில் சேர்ந்தனர். மழலையர் வகுப்பு, எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளில் குழந்தைகளை ஆர்வத்துடன் பெற்றோர் பலரும் சேர்த்தனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக திருப்பூர் மாநகரில்  அதிகபட்சமாக 114 ஆண் குழந்தைகள், 103 பெண் குழந்தைகள் என மொத்தம் 217 பேர் சேர்ந்தனர். இதற்கு அடுத்தபடியாக அவிநாசி வட்டத்தில் 52 ஆண் குழந்தைகள் மற்றும் 44 பெண் குழந்தைகள் சேர்ந்தனர். மாவட்டத்தில் குறைந்தபட்சமாக மூலனூர் வட்டத்தில் 5 ஆண் குழந்தைகள் மற்றும் 6 பெண் குழந்தைகள் என 11 பேர் சேர்ந்தனர். மாவட்டம் முழுவதும் 362 ஆண் குழந்தைகளும், 349 பெண் குழந்தைகள் என மொத்தமாக 711 பேர் சேர்க்கை நடைபெற்றது.

Tags : children ,
× RELATED புது வாழ்விற்கு வழியமைத்ததிரு(புது)நாள்