×

அரசு விடுதியில் உதவி சமையலர் துப்புரவு பணியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பூர், அக்.10: திருப்பூர் மாவட்டத்தில் சமூக நல அலுவலகத்தின் மூலம் நடத்தப்படும் பணிபுரியும் மகளிருக்கான அரசு விடுதியில் கீழ்கண்ட பணியில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
உதவி சமையலர் பதவிக்கு 1 நபர், அவருக்கு தொகுப்பூதியமாக நாள் ஒன்றுக்கு ரூ.250 வழங்கப்படும். அவர்கள் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். சமையல் வேலையில் தேர்ந்தவராக இருக்க வேண்டும். இதே பணியில் தினக்கூலி ரூ.234 வழங்கப்படும். அதற்கு 1 நபர் காலிப்பணியிடங்கள் உள்ளது. அதே போல் துப்புரவு பணியாளர் 1 நபர் காலிபணியிடம் உள்ளது. அவருக்கு தினக்கூலி அடிப்படையில் ரூ.234 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வெள்ளைத்தாளில் விண்ணப்பம் எழுதி திருப்பூர், மாவட்ட சமூகநல அலுவலருக்கு முகவரிட்டு வரும் 30.10.2019 க்குள் சமர்பிக்க வேண்டுமென  கலெக்டர் விஜயகார்த்திகேயன் தனது செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.


Tags : Government Hotel ,
× RELATED ஆண்டுக்கணக்கில் இணைப்பு வழங்காமல்...