×

காவல் துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு

பந்தலூர், அக். 10: பந்தலூர் அடுத்த கொளப்பள்ளி பஜாரில் 100க்கும் மேற்பட்ட ஆட்டோ, ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படுகிறது. சேரம்பாடி காவல்துறை சார்பில் நேற்று கொளப்பள்ளி பஜாரில் ஆட்டோ உள்ளிட்ட வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் போலீஸ் எஸ்.ஐ.க்கள் கிருஷ்ணன் மற்றும் வசந்தகதிரவன் ஆகியோர் கலந்துகொண்டு ஓட்டுநர் உரிமம்,  வாகனங்களுக்கு காப்பீடு உள்ளிட்டவை முறையாக வைத்திருக்க வேண்டும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்கவேண்டும், சந்தேகத்திற்குறிய நபர்களின் நடமாட்டம் இருந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும், குறிப்பாக வட மாநிலத்தவர் குறித்த தகவல் தெரிவிக்க வேண்டும்.   மேலும் குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், வாகன ஓட்டிகள் மற்றும் போலீஸ் நல்லுறவு குறித்து பேசினர். இதில் ஆட்டோக்களுக்கு போலீசார் சார்பில் புதிய குறியீடு எண்கள் வழங்கப்பட்டது. மேலும் வாகன ஓட்டிகளுக்கு உள்ள குறைகள் குறித்தும் போலீசார் கேட்டறிந்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்துகொண்டனர்.

Tags : motorists ,Police Department ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...