×

வாக்காளர் பட்டியலில் தாங்களாகவே திருத்தம் செய்யும் திட்டம் 15ம் தேதி வரை நீட்டிப்பு

பெரம்பலூர், அக்.10: பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் சரிபார்ப்பு முகாம் வருகிற 15ம் தேதி வரை நீட்டி க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெரம்பலூர் கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: வாக்காளாகள் தாங்களாகவே வாக்காளா் பட்டியலில் திருத்தம் செய்யும் திட்டம், கடந்த மாதம் 30ம் தேதி யுடன்நிறைவடைந்த நிலையில், தற்போது வருகிற 15ம்தேதி வரையில் அத்திட்டம் நீட்டிக்கப் பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் அனைத்து வாக்காளா–்களும் தங்களது பெயா், வயது, உறவினா் பெயா், பாலினம், முகவரி மற்றும் புகைப்படம் போன்றவற்றை சரிபார்த்து திருத் தங்களை மேற் கொள்ளலாம். மேலும் குடும்ப உறுப்பினா–்களின் விவரங்களையும் சரிப்பார்க்கலாம். திருத்தங்களை இணைய தளம் அல்லது வாக்காளா் உதவி மையம் அல்லது செல்லிடப்பேசி செயலி அல்லது இ-சேவை மையங்கள் அல்லது ஆர்டிஓ அலுவலகத்தில் செயல்படும் வாக்காளா் வசதி மையங் கள் அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண் 1950 வாயிலாக பட்டியலில் வாக்காளா–்கள் தாங்களாகவே திருத்தங்களை மேற் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED பெரம்பலூரில் செயல்படும் லால்குடி...