×

பவானி நகரில் மின் ஊழியர்கள் பற்றாக்குறையால் பணிகள் பாதிப்பு

பவானி, அக். 10:பவானி நகரில் மின்வாரிய ஊழியர்கள் பற்றாக்குறையால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. பவானி நகரப்பகுதியில் 27 வார்டுகள் உள்ளன. இந்த பகுதியில் சுமார் 14,000 குடியிருப்பு மற்றும் வர்த்தக மின் இணைப்புகள் உள்ளன.  பவானி நகர மின்வாரிய அலுவலகத்துக்கு உட்பட்ட இந்த பகுதியில், மின்வாரிய ஊழியர் காலிப்பணியிடங்கள் அதிகமாக உள்ளது. இந்த பகுதியில் மின்பழுது ஏற்பட்டால் அதை சீரமைப்பதில் மிகவும் காலதாமதம் ஏற்படுகிறது. பவானி நகர மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேன் 6 பேரும், ஃபீல்ட் அசிஸ்டன்ட் 6 பேரும், லைன் இன்ஸ்பெக்டர் 2 பேரும், போர்மேன் 2 பேரும் என மொத்தம் 16 பேர் பணியாற்ற வேண்டும். ஆனால், கடந்த 6 மாதத்துக்கு மேலாக 6 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.

வயர்மேன் 6 பேருக்கு மூன்று பேர் உள்ளனர். லைன் இன்ஸ்பெக்டர் ஒருவரும், போர்மேன் இரண்டு பேரும் என 16 பேருக்கு 6 பேர் மட்டுமே பணியாற்றுவதால் மின் இணைப்பில் ஏற்படும் பழுதுகளை சீரமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மின்கம்பத்தில் ஏறி பணியாற்றும் 12 பேரில் 3 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். மேலும், இரவு நேரங்களில் ஏற்படும் பழுதுகளை சரி செய்ய முடியாமல் ஊழியர்கள் திணறி வருகின்றனர். மின்கம்பத்தில் ஏறி பழுதை சரி செய்ய  3 பேர் மட்டுமே உள்ளதால் மின்தடை ஏற்பட்டால் சீரமைக்க மிகுந்த காலதாமதம் ஆகிறது. எனவே, பவானி நகர் பகுதியில் தேவையான மின் ஊழியர்களை நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Bhavani ,
× RELATED பாவங்களைப் போக்கும் பவானி அம்மன்