×

முத்துலாடம்பட்டியில் சிதிலமடைந்த மேல்நிலை தொட்டி பராமரிக்க மக்கள் வலியுறுத்தல்

கரூர், அக். 10: கரூர் நகராட்சிக்குட்பட்ட முத்துலாடம்பட்டியில் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலைதொட்டி வளாகத்தை பராமரிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை முத்துலாடம்பட்டியில் மேல்நிலைதொட்டி அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த தொட்டி அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போது தொட்டியின் கீழ்பகுதியில் உள்ள தூண்கள் உட்பட அனைத்தும் சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

மேலும் சிறுவர்கள் பெரும்பாலானோர் இந்த பகுதியில் விளையாடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். எனவே, ஆபத்தான நிலையில் உள்ள இந்த மேல்நிலை தொட்டியை பராமரிக்க வேண்டும் என இந்த பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுநாள் வரை எந்த பணியும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. மேலும் தூண்கள் சிதிலமடைந்து ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ள இந்த மேல்நிலை தொட்டியை அதிகாரிகள் பார்வையிட்டு தேவையான பராமரிப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Muthuladampatti ,
× RELATED கரூர், மேலப்பாளையம் பகுதியில் சூரியகாந்தி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்