×

அச்சத்துடன் கல்வி பயிலும் மாணவர்கள் கீரனூரை சுற்றியுள்ள கிராமங்களுக்கு கூடுதலாக நகர பேருந்துகள் இயக்க கோரிக்கை

புதுக்கோட்டை, அக்.10:  புதுக்கோட்டை மாவட்டம் கீரனுரை சுற்றி பல நூறுக்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் மாணவர்கள் நகர் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இவர்கள் பள்ளிக்கு சென்றுவர தங்கள் கிராமத்திற்கு வரும் நகர பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். கீரனூரை சுற்றியுள்ள பகுதிகளை பெருவாரியான பகுதிகளில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் எத்த பேருந்து இயக்கப்பட்டதோ அந்த பேருந்து மட்டுமே தற்போது வரை இயக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். குறிப்பாக தற்போது தொடர்ந்து மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் கிராமத்தில் இருந்து நகர் பகுதிக்கு படிப்போர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. இதனால் கிராமத்திற்கு வரும் நகர பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் வழக்கத்தைவிட அதிகரித்துவிட்டது. இதனால் பேருந்துகளில் படிகளின் தொங்கி கொண்டு ஆபத்தான நிலையில் பயணிக்கின்றனர். மாணவ, மாணவிகள். இதனை கருத்தில் கொண்டு முக்கிய வழித்தடங்களில் மாணவர்களின் நலன்களை கருதி கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: கீரனூர் பகுதிகளில் இருந்து இயக்கப்படும் நகர பேருந்துகள் ஒருசில வழித்தடங்களில் கடந்த 25 ஆண்டுகளுக்க முன் ஒரு பேருந்திற்கு மேல் கூடுதலாக பேருந்துகள் இயக்கவிலலை. இதனால் இப்பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதனால் மாணவ, மாணவிகள் சிரமங்களை அனுபவிக்கின்றனர். மேலும் இன்னும் சில நாட்களில் கல்லூரிகளும் தொடங்கப்படவுள்ளது. அப்போது இன்னும் கூட்டம் அதிரிக்கும். பேருந்துகளில் கூட்டம் அதிகரிப்பால் பேருந்துகள் ஆங்காங்கே பழுதாகி நின்று விடுகிறது. இதனை கருத்தில் கொண்டு கீரனூரை சுற்றியுள்ள கிராமங்களுக்கு கூடுதலாக நகர பேருந்துகளை இயக்க வேண்டும் என்றனர்.

Tags : villages ,
× RELATED திருப்பத்தூரில் 14 கிராமங்கள் தேர்தல் புறக்கணிப்பு