×

மீன்வாடைக்கு மூக்கை பொத்திய பெண்ணுக்கு கொலை மிரட்டல் ஆசாமி கைது

மயிலாடுதுறை, அக்.10: மயிலாடுதுறை அருகே மீன்வாடைக்கு மூக்கை பொத்திய பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள காஞ்சிவாய் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மனைவி விஜயா(42). இவரது மகள் ரஞ்சனி(19) என்பவர் காஞ்சிவாய் கீழத்தெரு வழியாக நடந்து சென்றுள்ளார். அப்பகுதியில் ராஜாமணி மகன் அய்யப்பன்(36) என்பவர் கடை வைத்து மீன் வியாபாரம் செய்து வருகிறார். அப்பகுதி துர்நாற்றம் வீசிவருவது வாடிக்கை. ரஞ்சனி அந்த வழியாகத்தான் செல்ல வேண்டும்.

அவ்வழியே செல்லும் போதெல்லாம் ரஞ்சனி தனது மூக்கைப் பிடித்துக்கொண்டே சென்றுள்ளார். நேற்று முன்தினமும் அவ்வாறு சென்ற ரஞ்சனியை வழிமறித்து திட்டி, இந்த வழியாக போனால் மூக்கை பொத்தாமல்தான் செல்லவேண்டும் அப்படி மூக்கைப்பொத்திச் சென்றால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதுகுறித்து ரஞ்சனி தனது தாய் விஜயாவிடம் கூறியுள்ளார். விஜயா அளித்த புகாரின்பேரில் பாலையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து அய்யப்பனை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Assamese ,
× RELATED அசாம் மக்கள் நிலங்களை...