×

கலெக்டர் தகவல் சீர்காழியில் விரைவு தட்கல் மின் இணைப்பில் விவசாயிகள் பயன்பெற அழைப்பு

சீர்காழி, அக்.10:சீர்காழி மின்சார வாரிய செயற்பொறியாளர் சதீஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சீர்காழி கோட்டத்திற்குட்பட்ட விவசாயிகள் மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் இருந்தாள் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விவசாய மின் இணைப்பு பெறும் வகையில் விரைவு தட்கல் மின் இணைப்பு வழங்கல் திட்டத்தின் மூலம் 5 குதிரை திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ.2.50 லட்சம், 7,5 குதிரை திறனுள்ள மின்மோட்டார்களுக்கு ரூ.2.75 லட்சம், 10 குதிரை திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ.3 லட்சமும், 15 குதிரை திறனுள்ள மின் மோட்டார் களுக்கு 4 லட்சமும் ஒருமுறை கட்டணம் செலுத்தும் 10,000 விண்ணப்பதாரர்களுக்கு இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது விண்ணப்பம் பதிவு செய்த காலம் 1.4.2003 முதல் 31.3.2010 வரை 31.10.2019 வரை பதிவு செய்த அனைத்து விண்ணப்பதாரர்கள் தட்கல் விருப்பமனு பதிவு செய்ய வேண்டிய காலம் 1.10.2019 முதல் 15.10.2019 வரை 16.10.2019 முதல் 31.10.2019 வரை விருப்ப மனு அளிப்பதற்கு முன்பு பெயர் மாற்றம், புல எண் மாற்றம், தடையில்லா சான்றிதழ் ஆகியவற்றுடன் சீர்காழி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து விவசாயிகள் பயன் பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

Tags :
× RELATED பயணியிடம் நகை பறித்த வாலிபர் சிறையிலடைப்பு