×

ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து

சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் மாத சந்தா தொகை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்திய சக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர் செந்தில் (39). இவர், கோடம்பாக்கம் முருகேசன் தெருவில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் கடந்த ஓராண்டாக ஆட்டோ ஓட்டி வருகிறார். ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டும் 12 பேர் மாத சந்தா வசூலித்து அதை உறுப்பினர்களே பிரித்து கொள்வது வழக்கம். அதன்படி இந்த மாத சந்தா தொகையை உறுப்பினராக உள்ள செங்குன்றம் பகுதியை சேர்ந்த மாதேஷ் (40) என்ற ஆட்டோ டிரைவர் செந்திலிடம் நேற்று முன்தினம் இரவு கேட்டுள்ளார். அதற்கு அவர் மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மாதேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால் செந்திலை சரமாரியாக முதுகு, இடது கை, மற்றும் முகத்தில் கிழித்தார். இதில் படுகாயமடைந்த செந்திலை அருகில் இருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் செந்தில் கொடுத்த புகாரின்படி அசோக் நகர் போலீசார் மாதேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : auto driver ,
× RELATED குன்றத்தூர் அருகே லோடு ஆட்டோ டிரைவர்...